டாஃபே மோட்டார்ஸ்-டியூட்ஸ் புதிய என்ஜின் உற்பத்தி மையம் ராஜஸ்தான் அரசின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரால், இன்று ஆல்வாரில் தொடங்கி வைக்கப்பட்டது
டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்யுப்மென்ட் லிமிடெட் க்கு முற்றிலும் சொந்தமான துணை நிறுவனமான டாஃபே மோட்டார்ஸ் அண்ட் டிராக்டர்ஸ் லிமிடெட் தனது புதிய ட்யூட்ஸ் என்ஜின் உற்பத்தி மையத்தை ராஜஸ்தானின் ஆல்வாரில் உள்ள அதன் தற்போதைய உற்பத்தி ஆலையில் இன்று திறந்து வைத்தது, இது டாஃபே மோட்டார்ஸ் மற்றும் ட்யூட்ஸ் ஏஜி இடையேயான முதல் உற்பத்தி மற்றும் தயாரிப்பு ஒத்துழைப்பைக் குறிக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய
ராஜஸ்தானின் கேபினெட் அமைச்சர் , ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் , கூட்டத்தில் உரையாற்றியபோது, மாநிலத்தில் டாஃபே-ன் முதலீட்டைப் பாராட்டினார். “ஆல்வாரில் உள்ள டாஃபே-யின் புதிய உற்பத்தி மையம், ராஜஸ்தான் ஒரு விருப்பமான உற்பத்தி இடமாக உருவெடுத்ததற்கு வலுவான ஒப்புதலாகும், மேலும் தற்சார்பு இந்தியாவின் தேசிய குறிக்கோகளுக்கு பங்களிக்கும் அதே நேரத்தில் ‘உலகத்திற்காக ராஜஸ்தானில் தயாரிக்கப்பட்டது’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு செயல் விளக்கம் அளிக்கிறது. முற்போக்கான கொள்கைகள் மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்குவதன் மூலம் வணிகத்திற்கு உகந்த சூழலை வளர்ப்பதற்கான மாநிலத்தின் உறுதிப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.
டாஃபே-யின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மல்லிகா சீனிவாசனின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமை மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவரது பங்களிப்பிற்காகவும் நான் பாராட்டுகிறேன் என்றார்



Post Comment