Loading Now

ரேஷன் கடைகளில் மது​ விற்பனை சுயேச்சை வேட்பாளர் வாக்குறுதி

image ரேஷன் கடைகளில் மது​ விற்பனை சுயேச்சை வேட்பாளர் வாக்குறுதி

திருத்தணி: ஏப்,01
திருத்தணி சட்டப்பேரவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம், வீரமங்கலம் பகுதியை சேர்ந்த எஸ்.சேட்டு, திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.பிறகு, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரூ.25 ஆயிரத்துக்கு மேல் மாத ஊதியம் பெறும் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் இலவசம் மற்றும் மானியத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும். 99 நாட்களில் அரசு கஜானா நிரப்பப்படும்.ரேஷன் கடைகளில் மதுவிற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share this content:

Post Comment

You May Have Missed