திருப்பூர் வடக்கு மாவட்ட பாமக – மாநில, மாவட்ட நகரப் பொறுப்புகள் வழங்கல்

திருப்பூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாநில மற்றும் மாவட்ட நகரப் பொறுப்புகள் வழங்கப்பட்டதை முன்னிட்டு, கட்சியின் நிறுவனர் அறிவுக்கடல் டாக்டர் ராமதாஸ் ஐயா அவர்களின் நல்லாசியுடனும், செயல் தலைவர் அக்கா ஸ்ரீகாந்தி அவர்களின் ஆசியுடனும், மாநில பொருளாளர் அண்ணன் மன்சூர், கொங்கு மண்டல பொறுப்பாளர் அண்ணன் கரூர் பாஸ்கரன் ஆகியோருக்கும், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கவின் ஜிம் வி.ஜெயமுருகன் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் பெரியார், ஜெமினி மகேந்திரன், இளைஞர் அணி செயலாளர் விக்னேஷ், தலைவர் நவீன் குமார், மகளிர் அணி செயலாளர் நாகலட்சுமி, இளம் பெண்கள் சங்கத் தலைவர் பாரதி, அமைப்பு தலைவர் ஜெய் குமார், மாவட்ட துணைத் தலைவர் பிரபு, சட்டப் பாதுகாப்புக் குழு செயலாளர் சபரி, தேர்தல் பணிக் குழு செயலாளர் கார்த்திக், தலைவர் ரமேஷ், கொள்கை விளக்க அணி செயலாளர் சரவணன், தலைவர் தேவராஜ், தொண்டரணி செயலாளர் சூர்யா, தலைவர் மணிகண்டன், சமூக ஊடக பேரவை செயலாளர் ராம்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரியங்கா, நகர் சரவணன், சக்தி விநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.



Post Comment