விருகம்பாக்கத்தில் இரண்டு நாள் பிரம்மாண்ட ஓவிய கண்காட்சி நடைபெறுகிறது
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆர்ட் கியூப் கேலரியில் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த செம்மொழி இவர் சிறு வயது முதல் ஓவியத்தில் ஆர்வம் கொண்டு இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்கள் மயில் இயற்கை காட்சிகள், கிருஷ்ணர், கேரளா கதக்களி நடனம் உள்ளிட்ட ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்தி உள்ளார் அதற்கு ஏற்றது போல் ஒளி கொடுத்து ஓவிய கேலரியில் வைத்துள்ளார் இந்த கேலரியை பார்ப்பதற்கு இந்தியா முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது கலையில் ஆர்வமுள்ள பொதுமக்கள் சிறுவர் மற்றும் செம்மொழியின் நண்பர்களும் இன்றும் நாளையும் இந்த கண்காட்சி நடைபெறும் விருகம்பாக்கத்தில், கேகே நகர் கோயம்பேடு, அரும்பாக்கம், போரூர் ஆழ்வார் திருநகர் வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இன்று 200க்கும் மேற்பட்டோர் ஓவிய கண்காட்சியை கண்டு களித்தனர் மேலும் ஒரு ஓவியத்தின் விலை 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை ஓவியங்கள் விலை நிர்ணயிக்கப்பட்டது இந்நிலையில் சுமார் 9 ஓவியங்கள் விலை கொடுத்து இன்று வாங்கப்பட்டுள்ளது. அந்த ஓவிய கண்காட்சியை காட்சிப்படுத்துவதற்கு செம்மொழியின் குடும்பத்தார் பெரும் உதவியாக உள்ளதாக செம்மொழி தெரிவித்தார்.



Post Comment