Loading Now

Breaking

அமைச்சர் நிர்மல் குமார் முன்னிலையில்நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநில செயலாளர் சங்கர் தவெகவில் இணைந்தார்..

நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையின் மாநில செயலாளராக இருந்தவர் வழக்கறிஞர் எஸ். சங்கர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை அண்ணா நகர் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டுள்ளார். மேலும் சீமான் சார்பில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வழக்குகளை நடத்தி வந்தார்.
இந்த நிலையில்
தலைமையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய அவர் தமிழக வெற்றிக்கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், தமிழக அரசின் எரிசக்திதுறை மற்றும் சட்டத்துறை அமைச்சருமான சி.டி.ஆர்.நிர்மல் குமார் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார் .அவருக்கு மற்ற வழக்கறிஞர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Share this content:

Post Comment

You May Have Missed