தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நீலகிரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிளை சார்பாக தூய்மை பணியாளர்களின் அர்ப்பணிப்பும் இஸ்லாம் கூறும் தூய்மை என்கின்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர் தூய்மை பணியாளர்களுக்கு காலனி மற்றும் கையுறை மற்றும் மாஸ்க் கொடுக்கப்பட்டது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உடைய மாநில பேச்சாளர் டி. அப்பாஸ் உரை நிகழ்த்தினார்.இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணாபுரம் கிளை தலைவர் சையது இப்ராஹிம். செயலாளர் முஸ்தாக்.பொருளாளர் ஷான் பாஷாதுணைத் தலைவர் ஜெமியுல்லாதுணை செயலாளர் சித்திக் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.



Post Comment