எர்ணாவூர் நெய்தல் நகர் நுழைவு வாயில் லிப்ட் கேட்டை திறந்து வைத்த கவுன்சிலர்
சென்னை திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட எர்ணாவூர் நெய்தல் நகர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது இதில் 150 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த பகுதியில் மக்கள் பாதுகாப்பு நலன் கருதி நெய்தல் நகர் கௌரவ தலைவர் சென்னை வடக்கு மாவட்ட அயலக அணி தலைவர் எஸ்டி சங்கர் ஏற்பாட்டில் நுழைவு வாயில் கேட் அமைக்கப்பட்டது அதனை இன்று ஐந்தாவது வார்டு மாமன்ற உறுப்பினரும் வட்டக் கழக செயலாளர் கே.பி. சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நுழைவாயில் கேட்டை திறந்து வைத்தார் இதனைத் தொடர்ந்து தண்ணீர் லாரி மற்றும் கனரா வாகனம் செல்ல செயல்பட்டது அதேபோல் சிறிய பகுதியில் ரிப்பன் கட்டப்பட்டு இதில் கௌரவ தலைவர் எஸ் டி சங்கர் மற்றும் கிராம ஒருங்கிணைப்பு சங்க தலைவர் ஏழுமலை ஆகியோர் ரிப்பன் வெட்டி இருசக்கர வாகனம் செல்வதற்கு பாதையை திறந்து வைத்தனர் இந்நிகழ்ச்சியில் கிராம ஒருங்கிணைப்பு சங்க தலைவர் ஏழுமலை மற்றும் நெய்தல் நகர் சங்கத் தலைவர் ஜோதி மற்றும் செயலாளர் ஜபருல்லா, மற்றும் நெய்தல் நகர் குடியிருப்போர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



Post Comment