அம்பத்தூர் அருகே தனியார் பள்ளிகள் நடைபெற்ற போதை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி அம்பத்தூர் உதவி ஆணையர் குமார் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூர் அடுத்த புதூர் பகுதியில் அமைந்துள்ள சேது பாஸ்கரன் பள்ளியில் போதையில்லா தமிழகம் உருவாக்கம் என்று சைக்கிள் பேரணி நடைபெற்றது முதலில் பள்ளி வளாகத்தில் உறுதிமொழி ஏற்று பின்பு பேரணியை அம்பத்தூர் உதவி ஆணையர் குமார் அவர்கள் பள்ளி நிறுவனரும் சேது குமணன் அவர்கள் கொடி அசைக்கில் துவக்கி வைத்தார் இந்த பேரணி ஆனது பல்வேறு வாசகங்கள் கொண்டு புது ஊரில் துவங்கி ஒரகடம் அம்பத்தூர் பேருந்து நிலையம் ராக்கி திரையரங்கம் வழியாக 5 கிலோமீட்டர் சென்றடைந்து பள்ளிக்கு வந்தடைந்தன இந்த பேரணியில் 250 மாணவர்கள் பல்வேறு வாசகங்கள் கொண்ட பாதகைகளை சைக்கிளில் ஏந்தியபடி பல்வேறு வாசகங்கள் எழுப்பி சென்றனர் இந்தப் பேரணியில் பள்ளி ஆசிரியர்களும் காவல்துறையினரும் திரளாக கலந்து கொண்டனர்



Post Comment