Loading Now

“திருமணம் அவ்​வளவு முக்கியமல்ல” – நடிகை திவ்யா கருத்து

தமிழில், பொல்​லாதவன், வாரணம் ஆயிரம் உள்பட பல படங்களில் நடித்​திருப்​பவர் கன்னட நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா. இவர் ‘திருமணம் அவ்​வளவு முக்​கியமில்​லை’ என்று கூறி​யிருப்​பது சமூக ஊடகங்​களில் விவாதத்தை ஏற்​படுத்தி இருக்​கிறது.

இதுகுறித்து அவர் அளித்த பேட்​டி​யில், “திரு​மணம் செய்து கொள்​வது உண்​மை​யிலேயே அவ்​வளவு முக்​கி​யம் இல்​லை. திரு​மணம் என்​பது நான் யார் என்​பதை வரையறுக்​காது. திரு​மணம் செய்​து​கொள்​ளாமல் இருந்தாலும் மகிழ்ச்​சி​யாக இருக்​கிறோம். மகிழ்ச்​சி​யாக இருப்​பது​தான் மிக​வும் முக்​கி​யம். அதே நேரம் திரு​மணம் அனை​வருக்​கும் பொருந்​தாது என்று கூற​வில்​லை. மனிதர்​களாகிய நாம் எப்​போதும் மாற்​றங்​களை விரும்​பு​கிறோம்.

ஒரு​வேளை பிரச்​சினை அங்​கிருந்​து​தான் தொடங்குகிறது. நல்ல நண்​பர்​களாக​வும், ஒரே மாதிரி​யான மதிப்​பு​களைக் கொண்​ட​வர்​களாக​வும் இருந்​தால், திரு​மணம் செய்​து​கொள்​வது நல்ல யோசனை​யாகத் தோன்​றும். திரு​மணம் செய்​து​கொண்டு மகிழ்ச்​சி​யாக வாழ்​பவர்​களும் நான் சொல்​வதை ஏற்​றுக்​கொள்​வார்​கள் என்று நினைக்கிறேன்.

திரு​மணம் செய்​து​கொள்ள விரும்​பும் சரி​யான நபரைச் சந்​தித்து விட்​டீர்​களா? என்​று கேட்​கிறார்​கள். அப்​படிப்​பட்​ட ஒரு​வரைச்​ சந்​திக்​கவில்​லை. அதில்​ இப்​போது கவனம்​ செலுத்​தவும்​ இல்​லை” என்று தெரிவித்​துள்​ளார்​.

Share this content:

Previous post

ஆண் நண்பருடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதால் இளம்பெண்ணை கொன்ற தந்தை, சகோதரர் கைது

Next post

தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி மீது அர்ஜுன் சம்பத் விமர்சனம்

You May Have Missed