தமிழ்நாட்டை சேர்ந்த ஆர். பிரக்ஞானந்தா (R. Praggnanandhaa) நார்வே செஸ் (Norway Chess 2026) தொடரை , போட்டியை வென்று முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சந்தித்து நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரக்ஞானந்தா50 லட்சம் ரூபாய் வெகுமதியாக செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலவர் விஜய் வழங்கினர்செஸ் போட்டியில் முதல்வரை தோற்கடித்து வென்றார் செஸ் வீர் பிரக்ஞானந்தாவிளையாட்டு வீரர்களுக்கு அரசு முன்னுரிமை வழங்கி வருவதாக செஸ் வீர் பிரக்ஞானந்தா பேட்டிசென்னை சேர்ந்த 20 வயதான கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் Vincent Keymer-ஐ வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார். அவர் மொத்தம் 18 புள்ளிகள் பெற்று சாம்பியனானார். நார்வே செஸ் தொடர் 2013 முதல் நடைபெற்று வந்தாலும், இதுவரை எந்த இந்தியரும் இந்தப் பட்டத்தை வென்றதில்லை. இந்திய செஸ் ஜாம்பவான் Viswanathan Anand கூட இந்தக் கோப்பையை வெல்ல முடியாத நிலையில், அந்த சாதனையை பிரக்ஞானந்தா நிகழ்த்தியுள்ளார். சென்னையைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் மிக வலுவான செஸ் தொடர்களில் ஒன்றான நார்வே செஸ் 2026-ஐ வென்று, இந்திய செஸ் வரலாற்றில் புதிய அத்தியாயம் படைத்துள்ளார். இந்த வெற்றி, இந்தியாவின் புதிய தலைமுறை செஸ் வீரர்களின் உலகளாவிய ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைப்படுத்திய தமிழ்நாடு சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தாசென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செஸ் வீரர்பிரக்ஞானந்தாநார்வே செஸ் (Norway Chess 2026) போட்டியில் கடினமான முயற்சியில் வெற்றி பெற்றேன் தமிழக முதலமைச்சர் அழைப்பின் பேரில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன்தமிழக முதலவர் செஸ் விளையாடுவாரா எனக்கு தெரியாது திடீரென்று செஸ் போர்டு வரவழைத்து தமிழக முதலமைச்சரும் நானும் இரண்டு நிமிடம் விளையாடினேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும். அதில் நான் தான் வெற்றி பெற்றேன் என கூறினார்50 லட்சம் ரூபாய் காசோலை வழங்கியதாகவும் தமிழக முதல்வரிடம் எந்த கோரிக்கையும் எனக் கூறினார்.விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை முக்கிய பங்களிப்பு அளித்து வருவதாக செஸ் வீர் பிரக்ஞானந்தா தெரிவித்தார்



Post Comment