சிறை கைதிகள் தயாரித்த இனிப்புகள்.. சிறப்பு விற்பனை
திருச்சி மத்திய சிறையில் கைதிகளால் தயாரிக்கப்பட்ட லட்டு, அல்வா, பூந்தி, முறுக்கு, பக்கோடா போன்ற இனிப்பு மற்றும் கார வகைப் பண்டங்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறை பஜாரில் விற்பனைக்கு வந்துள்ளன. வாடிக்கையாளர்கள் இவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். ஆரம்பத்தில் காய்கறி தோட்டங்களுக்குப் பெயர் பெற்ற இந்தச் சிறை, தற்போது கைதிகளின் உழைப்பால் விளைவிக்கப்படும் கரும்புகள் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களுக்குப் பெயர் பெற்றுள்ளது.



Post Comment