Loading Now

அமெரிக்கர் உள்ளிட்ட 7 வெளிநாட்டினர் மீதான தீவிரவாத குற்றச்சாட்டு கைவிடப்படவில்லை: என்ஐஏ சிறப்பு வழக்கறிஞர் தகவல்

புதுடெல்லி: அமெரிக்கர் உள்​ளிட்ட 7 வெளிநாட்டினர் மீதான தீவிர​வாத குற்​றச்​சாட்டு கைவிடப்​பட​வில்லை என என்ஐஏ சிறப்பு வழக்​கறிஞர் தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்​காவைச் சேர்ந்த மேத்யூ ஆரோன் வான்​டைக் கொல்கத்தா விமான நிலை​யத்​தில் கடந்த மார்ச் 13-ம் தேதி கைது செய்​யப்​பட்​டார். அதே நாளில் உக்​ரைன் நாட்​டைச் சேர்ந்த மேலும் 6 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இந்த 7 பேர் மீதும் டெல்லியிலுள்ள என்ஐஏ நீதி​மன்​றத்​தில் நேற்று முன்​தினம் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டது. ஆனால், அதில் தீவிரவாத தடுப்பு சட்டமான யுஏபிஏ பிரிவு​கள் இடம்​பெற​வில்​லை. இதனால் இந்​தப் பிரிவு கைவிடப்​பட்​டு​விட்​ட​தாக தகவல் வெளி​யானது.

இதுகுறித்து என்ஐஏ சிறப்பு அரசு வழக்​கறிஞர் கூறும்​போது, “இது​வரை நடந்த விசா​ரணை​யின்​போது, குடியேற்​றம் மற்​றும் வெளி​நாட்​டினர் சட்​டத்​தின் (ஐஎப்ஏ) கீழ் சுமத்​தப்​பட்ட குற்​றச்​சாட்​டு​கள் முழு​மை​யாக உறு​திப்​படுத்​தப்​பட்​டுள்​ள​தால் அந்​தப் பிரிவு​களின் கீழ் என்ஐஏ குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​துள்​ளது. யுஏபிஏ பிரிவின் கீழ் சுமத்​தப்​பட்​டுள்ள குற்​றச்​சாட்​டு​கள் தொடர்​பான விசா​ரணை தொடர்ந்து நடை​பெறுகிறது. இந்த குற்​றச்​சாட்​டு​கள் உறு​திப்​படுத்​தப்​பட்​டதும் துணை குற்​றப்​பத்​திரிகை தாக்​கல்​ செய்யப்​படும்​” என்​றார்​.

Share this content:

Previous post

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறைக்காக 5,400 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

Next post

சென்ட்ரல்​ ரயில்​ நிலையம்​ அருகே 2 கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல்: காவல்​ ஆணையர்​ எச்சரிக்கை

You May Have Missed