Loading Now

பேக்கர் ஹியூஸ் நிறுவனத்திற்காக பிரத்யேக லீன் உற்பத்தி ஆலையை ஆசாத் இன்ஜினியரிங் திறந்து வைத்தது..

image-6-1024x672 பேக்கர் ஹியூஸ் நிறுவனத்திற்காக பிரத்யேக லீன் உற்பத்தி ஆலையை ஆசாத் இன்ஜினியரிங் திறந்து வைத்தது..

துல்லியப் பொறியியலில் முன்னணியில் இருக்கும் ஆசாத் இன்ஜினியரிங், ஹைதராபாத், துனிகிபொல்லாரத்தில் உள்ள தனது சிறப்பு மையத்தில் 7,600 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அடுத்த தலைமுறை லீன் உற்பத்தி ஆலையைத் திறந்து வைத்து மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஆசாத் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ராகேஷ் சோப்தார் கூறியதாவது: “பேக்கர் ஹியூஸ் உடனான எங்களின் எட்டு ஆண்டு காலப் பயணத்தில், இந்த பிரத்யேகமான லீன் உற்பத்தி ஆலையின் தொடக்க விழா ஒரு முக்கிய மைல்கல்லாகும். நாங்கள் இதுவரை மேற்கொண்டதிலேயே மிகவும் கடுமையான தகுதி நிர்ணயப் பாதைகளில் ஒன்றின் மூலம் 2018-ல் இந்தப் பங்களிப்பு தொடங்கியது. எரிவாயு மற்றும் நீராவி விசையாழிகளின் இறுதி நிலைகளுக்கான முக்கியமான சுழலும் ஏர்ஃபாயில்களை வழங்குவதில் பேக்கர் ஹியூஸ் உடனான எங்கள் பயணம் தொடங்கியது. அது பின்னர், தொழில்துறை மற்றும் எரிசக்தி தொழில்நுட்ப வணிகத்திற்கான ஒரு ஆழமான, மூலோபாயப் பங்களிப்பாக வளர்ந்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள துனிகிபொல்லாரத்தில் அமைந்துள்ள எங்களின் சிறப்பு மையத்தில் உள்ள இந்த 7,600 சதுர மீட்டர் ஆலை, பேக்கர் ஹியூஸுக்காக பிரத்தியேகமாக, நிறுவனத்திற்குள்ளேயே சிறப்புச் செயல்முறைத் திறன்களுடன் கூடிய ஒரு பிரத்யேகமான, உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை உருவாக்கும் எங்களின் திட்டமிட்ட உத்தியின் ஒரு பகுதியாகும் என்றார்.

Share this content:

Post Comment

You May Have Missed