பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிவிற்கு பிறந்தநாள் வாழ்த்து – திராவிட முன்னேற்றக் கழகத்தின் பரிசளிப்பு

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தினரால் சிறப்பு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.அமைச்சரின் சமூகப்பணி, கல்வித்துறையில் முன்னேற்ற முயற்சிகள் மற்றும் மாணவர்களுக்கான நலத்திட்டங்களைப் பாராட்டும் வகையில், கழக நிர்வாகிகள் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் கழகத்தினர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, “தமிழ் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஆற்றும் அவரது பணிகள் தொடர வேண்டும்” என வாழ்த்துத் தெரிவித்தனர்.அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், அனைவருக்கும் நன்றி தெரிவித்து, கல்வி மேம்பாட்டிற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும் என உறுதியளித்தார்.



Post Comment