Loading Now

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்,,

தமிழக வெற்றி கழகம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து முதலமைச்சராகப் பதவியேற்ற ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதன் ஒரு பகுதியாக அமைச்சர் குமார் அவர்கள் சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள புத்திராங்கண்ணி அம்மன் கோவிலில் 100-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை இஸ்கான் கோவில் நிர்வாகம் செய்திருந்தது. அன்னதான நிகழ்ச்சியின் மூலம் ஏராளமானோர் பயனடைந்தனர். மேலும், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன.

நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டதுடன், முதலமைச்சரின் நல்லாட்சி தொடர வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

Share this content:

Post Comment

You May Have Missed