

தேவகோட்டை பள்ளியில் புத்தக வாசிப்பு திறமைக்கு பாராட்டு – மாணவிகளுக்கு பரிசு வழங்கல்!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புத்தகங்களை வாசித்து சிறப்பாக பின்னுட்டம் வழங்கிய மாணவிகளுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் செந்தில் குமரன் புத்தகங்களை பரிசாக வழங்கி பாராட்டினார்.நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நூலகப் புத்தகங்களை பரிசாக வழங்கினர்.ஏற்பாடு: ஆசிரியைகள் முத்துலெட்சுமி, முத்துமீனாள்படவிளக்கம்: கல்வி அலுவலர் செந்தில் குமரன் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
Post Comment