சென்னையில் ஹஜ் இல்லம்: இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கனவு நனவாகியது – முதலமைச்சருக்கு அபூபக்கர் நன்றி

இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கனவு இன்று நனவாகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் திரு. பிரசிடெண்ட் அபூபக்கர் அவர்கள் மக்காவில் இருந்து தெரிவிக்கும் வாழ்த்து செய்தி.சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. அதனை நனவாக்கும் வகையில் விமான நிலையம் அருகில் ஹஜ் இல்லம் கட்டுவதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டுவது மிகுந்த மகிழ்ச்சியும் நிறைவும் அளிக்கிறது. லட்சக்கணக்கான இஸ்லாமியர்களின் சார்பில் எங்கள் மனம் நிறைந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
Post Comment