

விக்கிரவாண்டி அருகே கொத்தமங்கலத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் கிராம பொதுமக்கள் மனு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் திண்டிவனம் தாலுக்கா செ.கொத்தமங்கலம் கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாமல் இருக்கும் அதிகாரிகளை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் கிராம பொதுமக்கள் மணு அம்மனுவில் கூறியிருப்பதாவது செ.கொத்தமங்கலத்தில் ஆதிதிராவிட தாழ்த்தப்பட்டவர்களை அவமதித்து வரும் வகையில் பல ஆண்டு காலமாக நீர்நிலை ஏறி அருகாமையில் இருக்கும் நில உரிமையாளர்கள் பட்டா பெற்று அனுபவித்து வருவதுடன் அதில் இருக்கும் மரங்களை வெட்டி விற்பதும் ஏரியை மீன் குத்தகைக்கு ஆண்டுக்கு ஒரு முறை 300000க்குஏலம் விடுவதும் இதனை கேட்டால் தாழ்த்தப்பட்டவர் எங்களை அவமதித்து வருவதாக காலம் காலமாக எங்கள் கிராமத்தில் ஜாதி கலவரம் ஏற்படும் நிலை உள்ளதால் இதனைத் தவிர்க்க உடனடியாக மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மணியில் கூறி இருந்தனர்
Post Comment