

ராஜாஜி பவனில் அம்பேத்கர் விழா!
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்களின் 134 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் உள்ள ராஜாஜி பவனில் ராஜாஜி பவன்சென்ட்ரல் கவர்மென்ட் எம்ப்ளாயீஸ் எஸ்.சி.,எஸ்.டி வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் விழா நடைபெற்றது.
இச்சங்கத்தின் தலைவர் அரசு தலைமை வகித்தார். பொதுச்செயலாளர்கள் சி.வி.சுதாகர் நாகபூஷணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் ராஜாஜி பவன் மண்டல இயக்குனர் சிவகுமார், ஏ.ஏ.ஓ., மணிவாசகம், பி.ஏ.ஓ., உமா மகேஸ்வரன், சி.பி.டப்ளுயு.டி., ஏ.இ., சுந்தர்ராஜ், யு.டி.சி பிரவீனா உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.
Post Comment