

புரட்சி பாரதம் கட்சியின் புதிய நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது
புரட்சி பாரதம் கட்சி சார்பில் புதிய நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் வீரபாண்டி செல்வம் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளர்களாகதலைமை நிலைய செயலாளர் ருசேந்திர குமார்,மாநில செயலாளர் தரணி மாரி,மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கோபி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இந்த நிகழ்வில்,மாநகரச் செயலாளர் செல்வராஜ்,வழக்கறிஞர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் சரவணகுமார்,துணை அமைப்பாளர் பிரேம்குமார்,தெற்கு ஒன்றிய செயலாளர் சுகன்யா,வடக்கு ஒன்றிய செயலாளர் வேலம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.புதிய நிர்வாகிகள் கட்சியின் வளர்ச்சி தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு, எதிர்கால நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.
Post Comment