

திருத்தணி நியூ ஈடன் ஆங்கில பள்ளி 20ஆவது ஆண்டு விழா எழுச்சியுடன் நடைபெற்றது.

திருத்தணி அருகே அமைந்துள்ள நியூ ஈடன் ஆங்கில மேல்நிலைப் பள்ளியின் 20ஆவது ஆண்டு நினைவு விழா விமர்சையாக நடைபெற்றது. விழாவிற்குத் தலைமை விருந்தினராக திரு. கே.பி.எஸ். விஸ்வநாதன், M.Com., M.Phil., Ph.D., மாவட்ட லயன் கிளப் தலைவர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கௌரவ பிரதம விருந்தினராக திருத்தணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தி.மு.க. மாவட்டச் செயலாளர் திரு. எஸ். சந்திரன், எம்.ஏ., பி.எல்., கலந்து கொண்டு விழாவிற்கு சிறப்பு சேர்த்தார். கௌரவ சிறப்பு விருந்தினர்களாக சின்னத்திரை மற்றும் திரைப்பட உலகில் பிரபலமான ‘Sun TV’ புகழ் ‘சிங்கப்பெண்ணே’ நடிகை சவுண்ட் சௌந்தர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் மாணவர்கள் கௌரவிப்பு: விழாவில் முன்னாள் மாணவர்களான “Voice of VASANTHAN” எம். விக்னேஷ், சினிமா தயாரிப்பு மேலாளரும் ஜீ தமிழ் சா-ரெ-க-மா-பா நிகழ்ச்சியில் புகழ் பெற்ற கே. கார்த்திக் மற்றும் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். நன்றி உரையாற்றியவர்கள்: திரு. டி. ரகுநாதன், பி.ஏ., மற்றும் முன்னாள் துணைத் தலைவர் திரு. டி. ஷியாம்சுந்தர் ஆகியோர் விழாவினை வாழ்த்தி நன்றி தெரிவித்தனர். பி.டி.ஏ உறுப்பினர்கள் பங்கேற்பு: பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்க உறுப்பினர்களான D. சின்னராஜ், B.Sc., (Asst. எச்.எம்.), ஜெயவேல் மேஸ்திரி, ஜி. ஸ்ரீனிவாசலு, பி.ஜி., (உதவியாளர்), மற்றும் கே.ஜி. கண்டிகை ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி, பள்ளியின் கல்வி வளர்ச்சி மற்றும் மாணவர்களின் சாதனைகளை போற்றும் அரியவிழாவாக அமைந்தது. சிறப்பு விருந்தினர்களுக்கு பரிசுகள் வழங்கி டாக்டர் சோனாசாந்தினி அவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.

Post Comment