

திண்டிவனம் வட்டாரபோக்குவரத்து அலுவலர் முக்கண்ணனுக்கு கவர்னரின் வெள்ளி பதக்கம் விழுப்புரம் கலெக்டர் வழங்கினார்
விழுப்புரம், ஜன.26 விழுப்புரத்தில் நடந்த குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் திண்டிவனம் வட்டார போக்குவர த்து அலுவலர் முக்கண்ணனுக்கு தமிழக கவர்னரின் வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவையினை விழுப்புரம் கலெக்டர் பழனி வழங்கி சிறப்பித்தார். திண்டிவனம் வட்டார போக்குவர த்து அலுவலர் முக்கண்ணனுக்கு கவர்னரின் பாராட்டு சான்றிதழில் அவர் கூறியிருப்பதாவது : முன்னாள் படைவீரர்களின் நலனுக்கான உங்கள் அர்ப்பணிப்பைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் இதற்காக நீங்கள் ரூ. 11,31,800/- ஆயுதப்படைகளின் கொடி நாள் சேகரிப்புக்கு உங்களுக்கு வெள்ளிப் பதக்கத்தை வழங்குவதன் மூலம் உங்கள் நேர்மையான முயற்சிகளுக்கு தமிழ்நாடு நிலையான கொடி நாள் அமைப்புக் குழுவின் தலைவர் என்ற முறையில் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் குடும்பத்தை விட்டு விலகி தேசத்திற்கு சேவை செய்தவர்களுக்கு சேவை செய்யும் இந்த உன்னத பணிக்கு உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குவீர்கள் என்று நான் நம்புகிறேன்.இவ்வாறு அந்த பாராட்டு சான்றிதழில்தமிழக கவர்னர்குறிப்பிட்டுள்ளார்.
Post Comment