

சென்னை | ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் போலீஸ் காவலில் எஸ்ஐயிடம் விடிய விடிய விசாரணை
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமதுகவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் பணத்தை மிரட்டிப் பறித்த வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றிய ராஜா சிங் (48), வருமான வரித் துறை அதிகாரி தாமோதரன்(42), ஊழியர்கள் பிரதீப் (41), பிரபு (41) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் இந்த வழிப்பறி வழக்கில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றிய சன்னி லாயிடுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாகி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் பதுங்கிய அவரை திருவல்லிக்கேணி தனிப்படை போலீஸார் கடந்த 15-ம் தேதி கைது செய்து சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சன்னி லாயிடுவை 4 நாள் காவலில் திருவல்லிக்கேணி போலீஸார் நேற்று முன்தினம் எடுத்து அவரிடம் விடிய விடிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், வழிப்பறி தொடர்பாக பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
Post Comment