

இந்திரா காந்தி நகர் அங்காள ஈஸ்வரி காளியம்மன் கோயில் 53வது தீமிதி திருவிழா: தூய்மை பணி நடைபெற்றது
சென்னை:
இந்திரா காந்தி நகர் பகுதியில் உள்ள அங்காள ஈஸ்வரி காளியம்மன் கோயிலில் 53வது ஆண்டு தீமிதி திருவிழா எதிர்வரும் மே 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, மே 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ‘காப்பு கட்டும்’ நிகழ்வு நடைபெறவுள்ளது.
திருவிழாவை முன்னிட்டு 36வது வார்டு மக்கல்வாழ்வுப் பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக சாலை, சாக்கடை உள்ளிட்ட பகுதிகளில் மாசுபாடுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தீமிதி திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க எதிர்பார்க்கப்படும் நிலையில், விழாவின் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Post Comment