

OVCI AWARDS விருது விழா சென்னை ஆவடியில் நடைபெற்றது
சென்னை ஆவடியில் உள்ள RR மஹாலில் 13/10/2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெறிய OVCI AWARDS விருது விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜிலென்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவர் அம்பாசிடர் டாக்டர் சத்திய கண்ணதாசன் தலைமையில் பல முக்கிய அடையாளங்களையும், சாதனைகளையும் கொண்ட ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட அக்ரி Dr. ராஜேந்திரன், சர்வதேச மிதிவண்டி வீரர் முனைவர் மா.ரா.சௌந்தர்ராஜன், திருக்குறள் மூலம் உலக சாதனை படைத்த குறள் அரசி திருமதி சீர்த்தலா தேவி மற்றும் ஆசிய அளவில் தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற திருநம்பி சாந்தி சவுந்தர்ராஜன் ஆகியோர் விழாவிற்கு கலந்து கொண்டு சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்கள்.இந்த நிகழ்ச்சி பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும், அவர்களது முயற்சிகளுக்கு ஓர் அங்கீகாரம் அளிப்பதாகவும் அமைந்தது.
Post Comment