Loading Now

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு

image-7 ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு

டெஹ்ரான்: ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை கடக்​கும் இந்திய எண்ணெய் கப்​பல்​களுக்கு இந்​திய கடற்​படை​யின் போர்க்​கப்​பல்​கள் பாது​காப்பு வழங்கி வரு​கின்​றன.

அரபிக்கடலில் பெர்​சி​யன் வளை​கு​டாவை​யும், ஓமன் வளை​கு​டாவை​யும் ஹார்​முஸ் ஜலசந்தி இணைக்​கிறது. இந்த ஜலசந்தி ஈரான் கடல் எல்​லையை ஒட்டி அமைந்துள்ளது. ஆசிய நாடு​களுக்​கான 85 சதவீத கச்சா எண்​ணெய், சமையல் காஸ் ஏற்​றுமதி ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாகவே நடை​பெறுகிறது.

அமெரிக்கா உடனான போர் காரண​மாக இந்த ஜலசந்​தி​யில் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்தை ஈரான் ராணுவம் முடக்கியுள்​ளது. இதன்​காரண​மாக, இந்​தி​யா​வில் சமையல் காஸ் சிலிண்​டர்​களுக்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டது. இதற்கு தீர்வு காணபிரதமர் நரேந்​திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் சமீபத்தில் தொலைபேசி வாயிலாக பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

இதன் பலனாக, ‘ஷிவாலிக்’, ‘நந்​தாதேவி’ ஆகிய இந்​திய கப்​பல்​கள் சுமார் ஒரு லட்​சம் டன் சமையல் காஸுடன் நேற்று முன்​தினம் ஹார்​முஸ் ஜலசந்​தியை பாது​காப்​பாக கடந்​தன. இரு கப்பல்​களும் இன்று அல்​லது நாளை குஜ​ராத்தை வந்தடையும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Share this content:

Post Comment

You May Have Missed