

நீலகிரி மாவட்டம் குன்னூரில் வழக்கறிஞர்கள் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கூறி மத்திய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு புதிதாக வழக்கறிஞர்கள் சட்ட திருத்த மசோதா ஒன்றினை அமலுக்கு கொண்டு வந்தது இதனைக் கண்டித்து தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் புதிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் வரும் வெள்ளிக்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக வழக்கறிஞர் சங்கத்தினர் தெரிவித்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க தலைவர் ராமச்சந்திரன் செயலாளர் நாகதேவி துணைத் தலைவர் மனோஜ் குமார் இணைச் செயலாளர் முபாரக் அற்புதமணி மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
Post Comment