

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை – விலையில்லா சீருடை வழங்கல் விழா
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா சீருடை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ரங்கீலா, அமலா, அமுதா, ரீட்டா, இந்திரா, ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் சீருடைகளை வழங்கினர். மாணவர்கள் புதிய சீருடைகளை பெற்றதில் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர் மற்றும் முத்துலெட்சுமி செய்து இருந்தனர்.
Post Comment