

திருவுருவ சிலை அமைப்பிற்காக மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் – சங்ககிரியில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கம் முன்வைப்பு

சங்ககிரி: கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கத்தின் சார்பில், இன்று (23.03.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை சங்ககிரி நினைவுத்தூன் முன்பு மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.இந்த நிகழ்வு, சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவாக சங்ககிரியில் திருவுருவ சிலை அமைக்க வேண்டிய தேவையை வலியுறுத்தும் வகையில் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கொங்கு சி.சுகுமார், கொங்கு ஜெயபால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர். மேலும், 600க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், ஆதரவாளர்கள், மற்றும் பொதுமக்கள் இதில் உறுதியாக கலந்து கொண்டு ஆதரவை தெரிவித்தனர்.இந்த திருவுருவ சிலை நிறுவம், வரலாற்று சிறப்புமிக்க தீரன் சின்னமலை அவர்களின் வீரத்தையும், தேசியத்திற்காக அவர் அளித்த தலைசிறந்த பங்களிப்பையும் நினைவூட்டும் என கூட்டத்தில் கலந்து கொண்டோர் வலியுறுத்தினர்.
Post Comment