

திருப்பூர் இடுவாயில் வாகன தணிக்கையும் காவலன் SOS செயலி விழிப்புணர்வும்
திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், மங்களம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி தலைமையில் இடுவாய் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, பொதுமக்களுக்கு “காவலன் SOS” செயலியின் முக்கியத்துவம் மற்றும் சாலை விதிகளைப் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் மங்களம் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் பங்கேற்றனர்.
அப்பகுதியில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த அறிவுரையை பெற்றுக் கொண்டு பயன்பெற்றனர்.
Post Comment