Loading Now

தமிழகத்தில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி உதயம்

சென்னையை தலைமை இடமாக கொண்டு புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டுள்ளது இந்த கட்சியின் பொதுச் செயலாளராக மு. ராஜா என்ற ஆசீர்வாதம் பொறுப்பேற்றுள்ளார் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தங்களது கட்சி அகில இந்திய தலைமையிலும் மாநிலத்திலும் முறையான செயல்பாட்டில் இல்லை என்பதால் கட்சியின் நலன் கருதி தாம் தனியாக புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி தமிழ்நாடு பிரிவை தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்தார் தமிழகத்தில் அடித்தட்டு மக்களுக்காகவும் விவசாய தொழிலாளர்களுக்காகவும் ஜாதி மத வேறுபாடுகளை கடந்து அனைத்து கட்சிகளுடனும் ஒருமித்த கருத்தை கொண்டு வந்து தமிழகம் முழுவதும் கட்சியை வளர்த்தெடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார் முதல் முறையாக புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி விழுப்புரம் கள்ளக்குறிச்சி மயிலாடுதுறை மதுரை ராமநாதபுரம் திண்டுக்கல் கன்னியாகுமரி சேலம் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து கட்சிப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார் தமிழகத்தில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி பலம் பெற வேண்டும் என்பதற்காகவே தாம் தனியாக பிரிந்து ஆதரவாளர்களுடன் இணைந்து புதிய கட்சியாக சோஷலிஸ்ட் கட்சி தமிழ்நாடு என்று தொடங்கி இருப்பதாக தெரிவித்தார் தமக்கு தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் வரும் பொது தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தலிலும் தமது கட்சி களம் காணும் என்றார் இந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Share this content:

Post Comment

You May Have Missed