Loading Now

சென்னை | ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்​கில் போலீஸ் காவலில் எஸ்ஐயிடம் விடிய விடிய விசாரணை

சென்னை: சென்னை வண்ணாரப்​பேட்டையைச் சேர்ந்த முகமதுகவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் பணத்தை மிரட்​டிப் பறித்த வழக்​கில் திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றிய ராஜா சிங் (48), வருமான வரித் துறை அதிகாரி தாமோதரன்​(42), ஊழியர்கள் பிரதீப் ​(41), பிரபு (41) ஆகிய 4 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

விசா​ரணை​யில் இந்த வழிப்பறி வழக்​கில் சைதாப்​பேட்டை காவல் நிலை​யத்​தில் சட்டம்​-ஒழுங்கு பிரி​வில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றிய சன்னி லாயிடுக்​கும் தொடர்பு இருப்பது தெரிய​வந்​தது.

இதையடுத்து தலைமறைவாகி உத்த​ராகண்ட் மாநிலம் டேராடூனில் பதுங்கிய அவரை திரு​வல்​லிக்​கேணி தனிப்படை போலீ​ஸார் கடந்த 15-ம் தேதி கைது செய்து சென்னை அழைத்து வந்து சிறை​யில் அடைத்​தனர்.

இந்த நிலை​யில் சன்னி லாயிடுவை 4 நாள் காவலில் திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் நேற்று முன்​தினம் எடுத்​து அவரிடம் விடிய விடிய விசாரணை மேற்​கொண்டு வருகின்றனர். இதில், வழிப்பறி தொடர்பாக பல்வேறு தகவல்கள் கிடைத்​துள்ளதாக கூறப்படுகிறது.

Share this content:

Previous post

சேலம் தாசில்தார், உசிலம்பட்டி சார் பதிவாளர், மதுரை எஸ்ஐ.. அடுத்தடுத்து கைதான அரசு ஊழியர்கள்

Next post

புரட்சி பாரதம் கட்சியின் புதிய நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது

Post Comment

You May Have Missed