

குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சமவெளி பகுதியில் இருந்து வரக்கூடிய அரசு பேருந்து உட்பட அனைத்து வாகனங்களையும் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான குழு கடும் சோதனை.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பிளாஸ்டிக் கவர் போன்ற பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் சமவெளி பகுதியில் இருந்து வரக்கூடிய அரசு பேருந்தில் பயணிகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வருகிறார்களா என்றும் சுற்றுலா வாகனங்கள் கார் இருசக்கர வாகனம் போன்றவற்றில் பிளாஸ்டிக் பாட்டில்கள் எடுத்து வரப்படுகிறது என்று சோதனை மேற்கொண்ட குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் தலைமையிலான குழு சோதனை மேற்கொண்டது சோதனையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டுவரப்பட்ட நபர்களுக்கு பாட்டில் ஒன்றுக்கு தல 100 ரூபாய் விதம் அபராதம் விதிக்கப்பட்டது. அதைப்போல் கனரக வாகனமான லாரிகளில் குடிநீருக்காக பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துகிறார்களா என பார்த்தபோது அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் பெரிய அளவில் கேன் வைத்து அதில் குடிநீர் பயன்படுத்தியது சோதனை ஈடுபட்ட அதிகாரிகள் லாரி ஓட்டுனரை பாராட்டக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது.
Post Comment