Loading Now

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் நடத்திய கேரம்போர்டு போட்டி வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் சார்பில் தலைவர் M. சுரேஷ் வேதநாயகம், துணைத் தலைவர் J. மதன், K. சுந்தர பாரதி, பொதுச் செயலாளர் M. ஹாசிப், இணைச் செயலாளர் நெல்சன் சேவியர், பொருளாளர் S. மணிகண்டன் ஜெயா மற்றும் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு குடியரசு தினத்தையொட்டி கேரம்போர்டு போட்டி நடத்தினர்.

போட்டியை துவக்கி வைத்தது திரு மருத்துவர் இ. ரா. வைத்தியநாதன் இ,ஆ.பா. வெற்றி பெற்றோருக்கு பரிசுகளை திரு ஜெ. மோகநாதர் ரெட்டி இ,ஆ.பா வழங்கினார்.

முதலாம் பரிசாக ரூபாய் 10,000, இரண்டாம் பரிசாக ரூபாய் 5,000, மூன்றாம் பரிசாக ரூபாய் 2,000 காசோலையாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு பத்திரிக்கையாளர்களிடையே ஒற்றுமையை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது.

Share this content:

Post Comment

You May Have Missed