

காரைக்குடி மாரத்தான் 2025 – சேது பாஸ்கரா வேளாண்மைகல்லூரி மாணவர்கள் பங்கேற்பு மற்றும் வெற்றி
காரைக்குடி, விசாலன்கோட்டையில் உள்ள கலாம் கவி கிராமத்தில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தீ பெடரல் ஆங்கில இணையதளம் மற்றும் செட்டிநாடு பப்ளிக் ஸ்கூல் இணைந்து நடத்திய காரைக்குடி மாரத்தான் 2025 வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக அமைந்திருந்தது. இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 1500 மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். அவர்களில் சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று தங்களது திறமை மற்றும் ஆற்றலை வெளிப்படுத்தி, பரிசுகளை வென்று பெருமை சேர்த்தனர். மாரத்தானில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை கல்லூரியின் தாளாளர் முனைவர் சேது குமணன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இவ்வகையான போட்டிகள் மாணவர்களின் உடல் உறுதியை மேம்படுத்துவதோடு, அவர்களுக்கு ஒற்றுமை, பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையை வளர்க்க உதவுகின்றன.
இந்த வெற்றியை அடைந்த மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள், நண்பர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். மேலும், எதிர்காலத்திலும் இத்தகைய போட்டிகளில் பங்கேற்று சாதனைகள் புரிய அனைவருக்கும் உற்சாகம் வழங்கப்பட்டுள்ளது.
Post Comment