Loading Now

காதல் திருமணம் முயற்சியில் ஏற்பட்ட தகராறு – சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீவலூர் கிராமத்தில், 18 வயது பூர்த்தியடையாத சிறுமியுடன் காதல் திருமணம் செய்ய முயற்சித்ததுடன், அதில் ஏற்பட்ட தகராறினால் சிறுமியின் தாயை கையால் அடித்து, காலால் எட்டி உதைத்தும், தந்தையை கத்தியால் வெட்ட முயன்ற சரித்திர குற்றவாளி சகா @ சீனிவாசன் (குப்பன் மகன்) என்பவரை ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் கைது செய்தனர்.இவ்வழக்கில் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் செய்யப்பட்ட பிறகு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும், சகா சீனிவாசன் மீது 15க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, கஞ்சா தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, குற்றச்செயல்களில் ஈடுபடும்வர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Share this content:

Post Comment

You May Have Missed