

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கி 70 ஆண்டுகள் பிறகு முதல்முறையாக அரசுப் பள்ளியில் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றிய உட்பட்ட புனிமாங்காடு வெங்கடாபுரம் கிராமத்தில் பள்ளி தொடங்கி 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஆண்டுவிழா நடைபெற்றது இதில் 30-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பாக நடனமாடியும் திருக்குறள் வாசித்த மாணவ செல்வங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.ஆந்திரா எல்லையும் தமிழக தொடக்கமான திருத்தணி அருகில் உள்ள ஊனி மாங்காடு வெங்கடாபுரம் கிராமத்தில் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஆண்டுவிழா விமர்சையாக நடைபெற்றது இதில் கிராம மக்கள் முன்னாள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆண்டு விழாவினை சிறப்பித்தனர்.
Post Comment