

இதய தெய்வம் அம்மா அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது.
முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, இதய தெய்வம் அம்மா அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், மாவட்ட கழகச் செயலாளர் திரு. R.S. ராஜேஷ் தலைமையில், பெரம்பூர் கிழக்குப் பகுதி கழகச் செயலாளர் D.Y.K. செந்தில்குமார், 46-வது கிழக்கு வட்டச் செயலாளர் D. சரவணன், 46-வது மத்திய வட்டச் செயலாளர் சீயான் C. செந்தில்குமார், 46-வது மேற்கு வட்டச் செயலாளர் V. கோபிநாத், E.L. கோகுல கண்ணன் மற்றும் பெரம்பூர் பகுதி பிரதிநிதி சாமியார் T. ஜெயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு செயல்பட்டனர். கழக செயல்வீரர்களின் பங்குடன், அம்மா அவர்களின் திருநினைவுகளை சிறப்பாக போற்றும் விதத்தில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
Post Comment