தமிழகம் முகப்பு S.V.KANIRAJA 26/05/2024 0 Comments குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் லேசான மழை தென்காசி/திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் லேசான மழை பெய்தது. இன்றும் சில இடங்களில் மழை நீடித்தது. இன்று காலை வரை 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம், நம்பியாறு அணைப் பகுதியில் 6 மி.மீ., கொடுமுடியாறு அணை, நாலுமுக்கு, காக்காச்சி பகுதியில் தலா 3 மி.மீ., மணிமுத்தாறு அணையில் 2.40 மி.மீ., மாஞ்சோலை, ஊத்து பகுதியில் தலா 2 மி.மீ. மழை பதிவானது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1052 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து 205 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 66.20 அடியாக இருந்தது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 3.75 அடி உயர்ந்து 34.75 அடியாக இருந்தது. மற்ற அணைகளில் நீர்மட்டம் உயரவில்லை. இதேபோல் தென்காசி மாவட்டத்தில் சிவகிரியில் 2.80 மி.மீ., தென்காசியில் 1.80 மி.மீ., குண்டாறு அணையில் 1 மி.மீ. மழை பதிவானது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 57 அடியாக இருந்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. வெள்ளப்பெருக்கு அபாயம் நீங்கியதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர். Share this content:
Previous post சேலம் மலை கிராம மக்களுடன் இபிஎஸ் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் Next post மதுரை – துபாய் ‘ஸ்பைஸ் ஜெட்’ விமானம் ரத்து: பயணிகள் கடும் வாக்குவாதம்
Post Comment Cancel reply Comments Name E-mail Save my name, email, and website in this browser for the next time I comment.
தமிழகம் முகப்பு பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் – 25.07.2025 அன்று நடைபெற உள்ளது
க்ரைம் தமிழகம் முகப்பு சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது – ராமநாதபுரத்தில் போலீஸ் நடவடிக்கை…
டாஸ்மாக் தமிழகம் முகப்பு மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய 4 அர்ச்சகர்கள் மீது அறநிலையத் துறை நடவடிக்கை…